திண்டுக்கல் அருகே இஸ்லாமியர்கள் பங்கேற்ற திருக்கல்யாணம்

திண்டுக்கல் அருகே இஸ்லாமியர்கள் பங்கேற்ற  திருக்கல்யாணம்

திருக்கல்யாணத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்

திண்டுக்கல் ரவுண்டு ரோடு புதூரில் முஸ்லிம் பெருமக்கள் பங்கேற்ற சீர்வரிசைகள் கொடுத்து பரமேஸ்வரி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தி வைத்தனர்.

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் ஸ்ரீ சக்தி சந்தான கணேசர், ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ லிங்கோத் பவர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் காலபைரவர் ஆகிய தெய்வங்கள் கொண்ட கோவில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் ஸ்ரீ பரமேஸ்வரி அம்பிகா சமேத ஸ்ரீ பரமேஸ்வரருக்கு முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் திருக்கல்யாண விழா நடந்தது. இதில் இஸ்லாமிய பெருமக்கள் பங்கேற்று சீர்வரிசைகளை சீர்வரிசைகளை அளித்தனர்.

பூமாலை ,வளையல் ,பட்டுச்சேலை பழங்கள் உட்பட 21 வகை சீர்வரிசைகளை அளித்தனர். விழா ஏற்பாடுகளை .J.C.அறக்கட்டளை தலைவர் தனபால் தலைமையில் ஊர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story