திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

 உலக தாய்மொழி தினத்தையொட்டி ராசிபுரத்தில் சித்திரம் பவுண்டேஷன் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.

உலக தாய்மொழி தினத்தையொட்டி ராசிபுரத்தில் சித்திரம் பவுண்டேஷன் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பசுமை குடிலில் சித்திரம் பவுண்டேஷன் சார்பாக மாநில அளவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் கையெழுத்துப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்ப்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் அனைத்து மாணவர்களும் இரண்டு நிமிடத்தில் 10 திருக்குறளுக்கு மேல் கூறினார்கள்.

மேலும் 250 மாணவ மாணவிகளுக்கு மேல் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்று சான்றிதழ்களையும் பதங்கங்களையும் பெற்று சென்றனர். இந்த நிகழ்வில் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜேஷ், கார்த்தி ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். இந்த நிகழ்வில் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர்கள், மாணவ ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story