சைவ சபை சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி

சைவ சபை சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி

திருக்குறள் முற்றோதல் போட்டி

தூத்துக்குடியில் சைவ சபை சார்பில் வருகிற 5ஆம் தேதி திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் சைவ சபை சார்பில் வருகிற 5ஆம் தேதி திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. பாளையங்கோட்டை சைவ சபை சார்பில் தூத்துக்குடியில் கீழ ரங்கநாதபுரத்தில் உள்ள சிஎம் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 5ஆம் தேதி காலை 10 மணிக்கு திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. இதில், 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று சைவ சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story