திருக்கோவிலுார் : வீரட்டானேஸ்வரர் கோவிலில் நிலங்கள் அளவீடு

திருக்கோவிலுார் : வீரட்டானேஸ்வரர் கோவிலில் நிலங்கள் அளவீடு


அளவீடு செய்யும் பணி


திருக்கோவிலுார், கிழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளது. இதில் பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தாலும், பராமரிப்பில் இருக்கும் கோவில் நிலங்களை நில அளவையர்களைக் கொண்டு அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது. அறங்காவல் குழுத் தலைவர் ஜெய்சங்கர், கோவில் எழுத்தர் மிரேஷ் குமார், கிராம நிர்வாக உதவியாளர் ரஜினி உடன் இருந்தனர். தற்போதைய ஆவணங்களின்படி சொத்துக்கள் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டா மாற்றம் செய்யப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்களை கண்டறிந்து கோவில் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள நடவடிக்கை வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story