திருக்கோவிலூர் : அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

திருக்கோவிலூர் : அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

பாலமுருகன் 

திருக்கோவிலூரில் இருந்து அரசு டவுன் பஸ் சோழவாண்டிபுரம் வழியாக ரிஷிவந்தியம் சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சோழவாண்டிபுரத்தில் பயணிகளை இறக்கி கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் பஸ்ஸின் பின்பக்கம் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்.இதுகுறித்து பஸ் டிரைவர் கோவிந்தராஜ் நேற்று கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.



Tags

Next Story