நாகை மாவட்டம் திருமருகல் சீராள மகாமாரியம்மன் கோவிலில் ஆனித்திருவிழா !

நாகை மாவட்டம் திருமருகல்  சீராள மகாமாரியம்மன் கோவிலில்  ஆனித்திருவிழா !

ஆனித்திருவிழா

நாகை மாவட்டம் திருமருகல் சீராள மகாமாரியம்மன் கோவிலில் ஆனித்திருவிழா தொடங்கியது.

நாகை மாவட்டம் திருமருகல் சீராள மகாமாரியம்மன் கோவிலில் ஆனித்திருவிழா நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி வள்ளுவன் தோப்பு கிராமத்தில் சீராள மகாமாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 5-ஆம் தேதி வெள்ளிக் கிழமை காப்பு கட்டுதல்,பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடர்ந்து நேற்று முன்தினம் கரகம் எடுத்தல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் பால்,தயிர்,பன்னீர்,இளநீர்,சந்தன ம்,திறுநீர்,தேன்,திரவியம்,மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும்,தீபாராதனையும் நடைபெற்றது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து நேற்று சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், கஞ்சி வார்த்தல், அன்னதானம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.இதில் திருமருகல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story