திருநெல்வேலி : காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருநெல்வேலி : காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் முகாம்

காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருநெல்வேலியில் நடந்த காவல்துறை குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அதன் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார்
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களைப் பெற்றார். 26 பேர் பங்கேற்று மனுக்களை அளித்தனர். அவற்றின் மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.முந்தைய வார குறைதீர் கூட்டத்தில் நிலுவையில் இருந்த மனுக்களில் 28 மனுதாரர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு காவல் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது.

Tags

Next Story