திருப்பத்தூர் : செல்போன் மோகத்தால் அக்காவை கத்தியால் குத்திய தம்பி

திருப்பத்தூர் : செல்போன் மோகத்தால் அக்காவை கத்தியால் குத்திய தம்பி

சிகிச்சை பெற்று வரும் கோகிலா

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே 13 வயது சிறுவன் கைபேசி எடுத்ததை தட்டி கேட்ட அக்காவை கத்தியால் குத்தியதால் பரபரப்பு. கந்திலி போலீசார் தீவிர விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பரதேசிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் கோகிலா (19). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோனிஷாவின் சித்தி இவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இவரது சித்தப்பாவின் மகன் 13 வயது சிறுவன் கைபேசியை திருடியதாக கூறப்படுகிறது. அதனால் மோனிஷா அவன் தான் கைபேசியை திருடியதாக அனைவரிடமும் கூறி உள்ளார். தன்னை அவமானம் படுத்தி விட்டதாக கூறி அவரை அந்த சிறுவன் கத்தியால் தலை.காது உள்ளிட்ட பகுதிகளில்வெட்டியதாக கூறப்படுகின்றது. தடுக்க வந்த அவரது பாட்டி பாப்பாத்தி அம்மாளையும் தடுக்கும்போது லேசாக வெட்டியுள்ளார். அவரது உறவினர்கள் இருவரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் மோகத்தால் 13 வயது சிறுவன் கத்தியால் அக்காவையும் பாட்டியும் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story