திருப்பத்தூர் : கோஷ்டி மோதல் - தந்தை மகன் உள்பட 3 பேர் கைது

திருப்பத்தூர் : கோஷ்டி மோதல் - தந்தை மகன் உள்பட 3 பேர் கைது

கோஷ்டி மோதல் 

திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன்(50). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கோகுல்சபரிநாதன்(27). என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்பட்டு வருகின்றது இந்நிலையில் இன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோகுல்சபரிநாதன் உருட்டு கட்டையால் ஐயப்பன் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி இருவரையும் சரமாரியாக தாக்கினார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதேபோன்று ஐயப்பன் தாக்கியதில் கோகுல் சபரிநாதனின் தந்தை சங்கர்(64).படுகாயம் அடைந்தார். பின்னர் இருவரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் கோகுல்சபரிநாதன் மற்றும் அவரது தந்தை சங்கர் மீதும், இதேபோன்று சங்கர் கொடுத்த புகாரின் பேரில் ஐயப்பன் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் கோகுல்சபரிநாதன், சங்கர் மற்றும் ஐயப்பன் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story