வாணியம்பாடியில் பேராசிரியர் க. அன்பழகன் 4ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

வாணியம்பாடியில் பேராசிரியர் க. அன்பழகன் 4ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

பேராசிரியர் அன்பழகன் 4ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு  

வாணியம்பாடி திமுக கழக அலுவலகத்தில் முன்னாள் பொது செயலாளர் க. அன்பழகன் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திமுக கழக அலுவலகத்தில் முன்னாள் பொது செயலாளர் க. அன்பழகன் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

வாணியம்பாடியில் உள்ள திமுக கழக அலுவலகத்தில் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் பெருந்தகை க.அன்பழகன் அவரின் நான்காம் ஆண்டு நினைவு நாள், அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா, மாவட்ட அணிகளின் து.அமைப்பாளர்கள் ரஜினி, சக்கரவர்த்தி, பார்த்திபன் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.

Tags

Next Story