திருப்பத்தூர் : ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை

திருப்பத்தூரில் ஈத்கா மைதானத்தில் உள்ள பூர்ணா மசூதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தியாக திருநாளாம் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாம் மார்க்கத்தில் ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் பண்டிகை ஆகிய இரண்டு பண்டிகைகள் மட்டுமே முக்கிய பண்டிகைகளாக, பெருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஈத்கா பூர்ணா மசூதியில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். மேலும் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Tags

Next Story