திருப்போரூர்: வீடு பூட்டை உடைத்து 18 சவரன் திருட்டு

திருப்போரூர்: வீடு பூட்டை உடைத்து 18 சவரன் திருட்டு

திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் தாலுகா, இள்ளலூர் அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதியர் ஏழுமலை - எல்லம்மாள், இவர்கள் இருவரும் காலவாக்கம் தனியார் கல்லூரியில் தோட்ட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு இருவரும் வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு வீட்டிற்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு கம்மல், மோதிரம், செயின் உட்பட 18 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து ஏழுமலை திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story