திருப்போரூர் : நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் பொதுமக்கள் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராஜ் , திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர்,திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.இதயவர்மன், செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியர் , திருப்போரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வேளாண்மை ஆத்மா குழு தலைவர் எம்.சேகர் , வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஏ.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா , நான்கு சக்கர வண்டி, சாதி சான்றிதழ், மரக்கன்றுகள் வழங்கினார்கள்.. இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் , அரசு அதிகாரிகள் மற்றும் பயனனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story