நடைப்பயிற்சி மேற்கொள்ளபவர்களிடம் சிபிஐ வேட்ப்பாளர் வாக்கு சேகரிப்பு.

இந்தியா கூட்டணியின் திருப்பூர் மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் 15 வேலம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்தியா கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்ற வேட்பாளர் சுப்புராயன் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்குமாறு, வேலம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் பொதுமக்களை சந்தித்து வாக்குசேகரித்தார்.இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் MLA, வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு‌‌‌நாகராசன், பகுதி கழகச் செயலாளர் ராமதாஸ், துணை மேயர் பாலசுப்ரமணியம்,தோழமை கழக நிர்வாகிகளும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story