திருப்போரூர்: பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

திருப்போரூர்: பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

சோதனை செய்த அதிகாரிகள் 

திருப்போரூரில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டசபை தொகுதியில் அடங்கிய திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலை, வெங்கூர் உள்ளிட்ட பகுதிகளில், பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர்.

50, 000 ரூபாய்க்கு மேல் பணம், அதிக எண்ணிக்கையில் பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என, சோதனை செய்யப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததைதொடர்ந்து, திருப்போரூர் எம். எல். ஏ. , அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

அங்கிருந்த கட்சி விளம்பரம், கொடிக் கம்பம்அகற்றப்பட்டன. மேலும், எம். எல். ஏ. , அலுவலகம், ஓ. எம். ஆர். , சாலை, அம்பேத்கர் சிலை அருகே செயல்படுவதாக, தகவல் பலகை வைத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story