திருப்போரூர் காவல் நிலையத்திற்கு வயது 117

திருப்போரூர் காவல் நிலையத்திற்கு வயது 117
கேக் வெட்டி கொண்டாடிய காவல்துறையினர்
திருப்போரூரில் 1907ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட, காவல் நிலையம் அடிக்கல் நாட்டி 116 வருடங்களை கடந்தும் அதனை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூரில் 1907-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட, திருப்போரூர் காவல் நிலையம் அடிக்கல் நாட்டி 116 கடந்தும் இதுவரையிலும் அதனை போலீசார் பயன்படுத்திவருகின்றனர். இந்தக் காவல் நிலைய கட்டடம் கட்டி 116 ஆண்டுகள் முடிந்து 117ஆம் ஆண்டு தொடங்குவதை கொண்டாடும் வகையில் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல் துறையினர் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Tags

Next Story