திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை!

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை!

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செஉது கொண்ட சம்பவத்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செஉது கொண்ட சம்பவத்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை! திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 52).இவர்களுக்கு2 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன் தினம் இரண்டு மகன்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதை புவனேஸ்வரி கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த புவனேஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story