திருப்பூர் அவிநாசிபாளையம் சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்

திருப்பூர் அவிநாசிபாளையம் சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்

விவசாய அமைப்பினர் முற்றுகை போராட்டம் 

தாராபுரம் ரோடு அவிநாசி பாளையத்தில் உள்ள சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் பொதுமக்கள் விவசாய அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் வேலம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய அமைப்புகள், பொதுமக்கள் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நீர் நிலையை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு இருப்பதாக கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் அதனை அகற்ற உத்தரவிட்ட நிலையில் உத்தரவையும் மீறி நாளைய தினம் முதல் செயல்பாட்டிற்கு வர உள்ள நிலையில் இன்று அரசியல் கட்சியினர் பொதுமக்கள் விவசாய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story