திருப்பூர் சாய ஆலை சங்கத்தினர் ரூ 10 லட்சம் வெள்ள நிவாரண நிதி

திருப்பூர் சாய ஆலை சங்கத்தினர்  ரூ 10 லட்சம் வெள்ள நிவாரண நிதி

நிவாரண நிதி 

திருப்பூர் சாயஆலை சங்கத்தின் சார்பில் வெள்ள நிவாரண நிதியாக ரூ 10 லட்சத்திற்கான காசோலையை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினர்.
சென்னை மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களுக்கு உதவும் பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதியாக திருப்பூர் சாய ஆலை சங்கம் சார்பில் 10 லட்சத்திற்காக காசோலையை சங்கத்தின் தலைவர் காந்திராஜ் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயரிடம் வழங்கினர்.

Tags

Next Story