திருப்பூர் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு தீவிரவாத உறுதி மொழியும் எடுக்கப்பட்டது. உடன் கோபால்சாமி,பி.ஆர்.ஈஸ்வரன், துணைதலைவர் வெ.கோபால்,திருஞானம், ரஹ்மத்துல்லா,பழனிச்சாமி,ஷேக்தாவூத், பிசிசி ராமசாமி,ரத்தினமூர்த்தி,ஹசன். சர்க்கிள் தலைவர் கோவிந்தசாமி, நட்ராஜன்.எஸ்.சிபிரிவுதலைவர் உலகநாதன், ஜ.என்.டி‌.யு‌.சி பெருமாள்,சிவசாமி,ரத்தினமூர்த்தி,பன்னிர்செல்வம் ,பிரதீப்,பாபு மற்றும் மண்டல தலைவர்கள் டிவிசன் தலைவர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story