திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளம்

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் நல்லம்மன் தடுப்பணை கோவிலை நீர் சூழ்ந்தது.
திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளம். நல்லம்மன் தடுப்பணை கோவிலை நீர் சூழ்ந்தது. அணைப்பாளையம் தரைப்பாலத்தையும் மூழ்கடித்தபடி வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த சில தினங்களாக கோவை திருப்பூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது திருப்பூர் வஞ்சிபாளையம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணை கோவிலை நொய்யல் ஆற்று நீர் சூழ்ந்து. கோவிலுக்கு செல்லும் பாதையை மூழ்கடித்து சென்று கொண்டிருக்கிறது மேலும் ஆண்டிபாளையம் அருகே அமைந்துள்ள அணைப்பாளையம் தரைப்பாளத்தையும் மூழ்கடித்து நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் இருகரைகளை தொட்டு சென்று கொண்டிருக்கிறது.

Tags

Next Story