அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

ஆய்வு கூட்டம் 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், NTDACL, குடிநீர் திட்டம், நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம், சுற்றுலாத்துறை, சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை, சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகம் மற்றும் நெடுஞ்சாலை துறை ஆகிய துறையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அலுவலக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி மற்றும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story