சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருத்தங்கல் மாரியம்மன்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருத்தங்கல் மாரியம்மன்
 சிவகாசி அருகே திருத்தங்கல் மாரியம்மன் கோவிலில், பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகாசி அருகே திருத்தங்கல் மாரியம்மன் கோவிலில், பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் இந்து அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.பங்குனி பொங்கலின் 4ஆம் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.

பின்னர் அம்மனுக்கு பச்சை பட்டு உடுத்தி மேளம்,தாளம் முழங்க வாண வேடிக்கையுடன் தட்டு சப்பரத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags

Next Story