டிப்ளமோ படித்த போலி மருத்துவர் - அதிரடியாக கைது செய்த போலீசார்

டிப்ளமோ படித்த போலி மருத்துவர் - அதிரடியாக கைது செய்த போலீசார்

போலி மருத்துவர் கைது

டிப்ளமோ படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்தவர் மீது நடவடிக்கை

திருவண்ணாமலை அருகே மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பொக்க சமுத்திரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக டிப்ளமோ படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த புகாரில் விஸ்வநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். விஸ்வநாதன் போலி மருத்துவம் பார்த்தது தொடர்பாக வெம்பாக்கம் வட்டார மருத்துவர் சுரேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story