திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா, கவிநாடு கண்மாயில் 61ம் ஆண்டு ஜல்லிகட்டு போட்டி!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கவிநாடு கண்மாயில் 61ம் ஆண்டு ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது.
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கவிநாடு கண்மாயில் 61ம் ஆண்டு ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ள 800 காளைகளும் 300 காளையர்களும் பங்கேற்றுள்ளனர். முதலில் முத்துமாரியம்மன், கருப்பர், அய்யனார் கோயில் காளை வானவேடிக்கையுடன் மேலதாளங்கள் முழங்க வாடிவாசலிலிருந்து அவிழ்க்கப்பட்ட நிலையில் அதன் பிறகு ஒவ்வொரு காளைகளும் அவிழ்த்து விடப்பட்டு வரக்கூடிய நிலையில் வாடிவாசலில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து வரும் காளைகளை தீரத்துடன் வீரர்கள் தழுவி வருகின்றனர்‌.

Tags

Next Story