நாகை மாவட்டம் திருக்குவளை சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை

நாகை மாவட்டம் திருக்குவளை சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை

நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த சித்தாய்மூர் சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.


நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த சித்தாய்மூர் சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த சித்தாய்மூர் சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை. நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த சித்தாய்மூர் சக்ரபீடேஸ்வரி அகிலாண்டேஸ்வரி அம்மாள் சமேத சதுர்யுக நாதர் ஸ்வர்ண ஸ்தாபனேஸ்வர் சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நேற்று முந்தினம் இரவு நடைபெற்றது. இந்த கோயிலில் வைகாசி விசாக உற்சவம் கடந்த மே 21 ஆம் தேதி அனுக்ஞை, ,விக்னேஸ்வர பூஜையுடன் தொடகியது.விழாவின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து உலக அமைதிக்காவும், விவசாயம் செழிக்க வேண்டிய சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது? பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டது .ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர்,விழா குழுவினர் மற்றும் கிராம வாசிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story