டிஎம்பி வங்கி சார்பில் சக்கர நாற்காலிகள் வழங்கல்!

டிஎம்பி வங்கி சார்பில் சக்கர நாற்காலிகள் வழங்கல்!


சக்கர நாற்காலிகள் வழங்கல்


தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு 38 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் (CSR) நாகர்கோவில் மாநகராட்சிக்கு 38 சக்கர நாற்காலிகள் ஸ்பான்சர் செய்துள்ளது.

வங்கியின் பொது மேலாளர் அசோக்குமார், PD&RM துறை ராஜா, திருவனந்தபுரம் மண்டல மேலாளர் ராம்குமார், மார்க்கெட்டிங் அலுவலர் சிவசங்கர், நாகர்கோவில் கிளை மேலாளர், மற்றும் தமிழ்நாடு மெர்க்ன்டைல் வங்கி அதிகாரிகள் முன்னிலையில், சக்கர நாற்காலியை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் வங்கியின் பொது மேலாளர் அசோக்குமார் வழங்கினார்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB), ஒரு பெயர்பெற்ற பழைமை வாய்ந்த தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து இலாபம் ஈட்டியும் வருகிறது. வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 558 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவகங்களை கொண்டு சுமார் 50 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.

Tags

Next Story