மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

 கள்ளக்குறிச்சி கோட்டத்தில், நாளை 5ம் தேதி, பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி கோட்டத்தில், நாளை 5ம் தேதி, பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாரம் தோறும் செவ்வாய்கிழமை மின்சார கோட்டம் வாரியாக பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களிடம் மின்சாரம் தொடர்பான குறைகளை கேட்டறிந்து, அதை சரிசெய்யும் பொருட்டு வாரம் தோறும் செவ்வாய்க் கிழமை பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி மார்ச் மாதத்தில், கள்ளக்குறிச்சி கோட்டத்தில், நாளை 5ம் தேதி, திருக்கோவிலுாரில் 12ம் தேதி, சங்கராபுரத்தில் 19ம் தேதி, உளுந்துார்பேட்டை கோட்டத்தில் 26ம் தேதியும் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது பகுதிக்குட்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்து பயன்பெறலாம்.

Tags

Next Story