மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும்- வினோஜ் பி.செல்வம் பிரச்சாரம்

மக்கள் பிரச்சனையை பேசுவதுதான் எங்கள் வேலை - திருவல்லிகேணியில் உறுதி அளித்த வினோஜ் பி.செல்வம்

மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் நேற்று மாலை வில்லிவாக்கம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.அப்போது வினோஜ் பி செல்வம் பேசுகையில் ,தாமரை மீது மக்கள் காட்டும் பாசமும் அன்பும் அலாதியானது எனவே மத்திய சென்னையில் பாஜகவின் வெற்றி தவிர்க்க முடியாதது என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக திருவல்லிக்கேணியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, மக்கள் பிரச்சனையை பாராளுமன்றத்தில் பேசுவதுதான் MP- யின் வேலை அதை நாங்கள் செய்வோம் . மக்களுக்கான புதிய அரசியலையும் ,புதிய பாதையையும் உருவாக்கி தருவோம் என்றும் உறுதி அளித்தார் .மக்கள் வெல்ல வேண்டும் அதற்காக நாங்கள் கடுமையாக போட்டி போட்டுகொண்டு இருக்கிறோம் என்றார்.

Tags

Next Story