செங்கோட்டையில் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

செங்கோட்டையில் சாலையை சீரமைக்க  வாகன ஓட்டிகள் கோரிக்கை
பழுதடைந்து சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
செங்கோட்டையில் பழுதடைந்து சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே உள்ள சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாகத்தான் கேரளா மாநிலத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து காயமடைவது தொடர்கதையாக உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story