நீலகிரி மக்களை காப்பாற்ற எல்.முருகன் தேர்தலில் போட்டி: அண்ணாமலை

நீலகிரி மக்களை காப்பாற்ற  எல்.முருகன் தேர்தலில் போட்டி: அண்ணாமலை

பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை

நீலகிரி மக்களை காப்பாற்ற பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

நீலகிரி நாடாளுமன்ற (தனி) தொகுதி பா.ஜ.க., வேட்பாளர் எல்‌.முருகனுடன் வேட்புமனு தாக்கல் செய்ய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை வந்தார். அ

ண்ணாமலை நிருபர்களிடம் பேசுகையில், "நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஆ. ராசாவிடம் சண்டை போடுவதற்காக எல். முருகன் போட்டியிடவில்லை ஆ. ராசாவிடமிருந்து நீலகிரி தொகுதி மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் எல்.முருகன் அமுல் என்ற நிறுவனத்தில்,

நீலகிரி தேயிலை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் அந்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்," என்றார்.

Tags

Next Story