மேட்டூரில் 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

மேட்டூரில் 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

புகையிலை

சேலம் மாவட்டம் மேட்டூரில் 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்தனர்.
மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள காமனேரி பஸ் நிறுத்தத்தில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்திரவின் பேரில் தனிப்படை போலீசார் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை இட்டனர். சோதனையில் 20 பண்டல் ஹான்ஸ், குட்கா 6 பண்டல் இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மேச்சேரி கோல்காரனூரைச் சேர்ந்த சுஜித் (25), கொப்பம் புதூரை குமார் (36) ஆகியோரை கைது செய்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்ட புகையிலைப் பொருட்கள் மதிப்பு ரூ 2 லட்சம். பெங்களூரில் இருந்து மேச்சேரிக்கு கடத்தி வரப்பட்டு மேச்சேரி சுற்றுவட்டார கடைகளுக்கு விநியோகித்தது தெரியவந்துள்ளது.

Tags

Next Story