புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது !

புகையிலை பொருட்கள்  விற்ற நபர்  கைது !

புகையிலை

குமாரபாளையத்தில் புகையிலைப் பொருட்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கம்பன் நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ. கங்காதரன் உள்பட போலீசார் பலர் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனை செய்த ஸ்ரீதர், 27, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 10 புகையிலைப் பொருட்கள் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story