புகையிலை விற்பனை: 7 கடைகளுக்கு சீல்!

புகையிலை விற்பனை: 7 கடைகளுக்கு சீல்!

ஆறுமுகனேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 7 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

ஆறுமுகனேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 7 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புகையிலை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவ­லின்பேரில் ஆறுமுகனேரி போலீசார் கடைகளை சோதனை மேற்கொண்டனா். இதில் 7 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த கடைகளை சீல் வைப்பதற்கு, பேரூராட்சி நிா்வாகத்தினரிடம் அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி, 7 கடைகளுக்கும் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தலைமயிலான பணியாளா்கள் சீல் வைத்தனா். காவல் உதவி ஆய்வாளா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

Tags

Next Story