ஆட்டோவில் புகையிலை கடத்தி வந்த ஒருவர் கைது

ஆட்டோவில் புகையிலை கடத்தி வந்த ஒருவர் கைது
ஆட்டோவில் புகையிலை கடத்தி வந்த ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஆட்டோவில் புகையிலை கடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் உட்கோட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் புகையிலை சம்பந்தமாக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராமு தேவன் பட்டி பகுதியில் தீவிரவாத சோதனை நடத்தினர்.

அதில் பஜாஜ் மேக்சிமோ ஆட்டோவை ஓட்டி வந்த குருசாமி என்பவரை நிறுத்தி சோதனை செய்வதில் அவரிடம் 12 கிலோ 375 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரிய வந்தது .

அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்ததாக தகவல் தரையில் வைக்கப்பட்டுள்ளது

Tags

Next Story