இன்று பஞ்சமி திதி !! வாராகி அம்மனை வழிபட உகந்தநாள்

இன்று பஞ்சமி திதி !! வாராகி அம்மனை வழிபட உகந்தநாள்
இன்று பஞ்சமி திதி !! வாராகி அம்மனை வழிபட உகந்தநாள் வாராகி தேவியை வழிபட வேண்டிய நாள். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாளும், பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும். இது ஓர் மகத்தான திதி என்று சொல்லப்படுகிறது. சப்த மாதர்களில் வராகியும் ஒருவர். நாம் செய்கின்ற காரியத்தில் ஜெயமும், காரிய சித்தியும் தருபவள். இந்நாளில் சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் நமக்குக் கிடைக்கும். வாராஹி வழிபாட்டு முறை வராஹி அம்மனுக்கு விரதம் இருக்க நினைப்பவர்கள், வாராஹி தேவியை வணங்கி விரதத்தை ஆரம்பிக்கலாம். விரத நாட்களில், கேசரி, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் புராணம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் வாராஹி தேவிக்கு நெய்வேத்தியம் செய்யலாம். மேலும், வெள்ளரிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றையும் நெய்வேத்தியமாக செய்து வழிபடலாம். வராஹி அம்மனுக்கு உகந்த நிறம் பச்சை நிறம் என்பதால், விரதம் இருக்கும் நாட்களில் பச்சை நிற விரிப்பின் மீது அமர்ந்து, இலுப்பை எண்ணெயைத் தீபமாக ஏற்றி வழிபடலாம். அப்படி தீபம் ஏற்றும் பொழுது கிழக்கு நோக்கி ஏற்றினால், வடக்குப் பக்கம் அமர வேண்டும். வளர்பிறை பஞ்சமி திதி திருநாளன்று வராகி அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால் தீய சக்திகள் விலகி நன்மைகள் ஏற்படும். எல்லோரும் பஞ்சமி திதியில் விரதமிருந்து வழிபடலாம். ஆனால், குறிப்பாக பஞ்சமி திதியில் பிறந்த ஜாதகர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த ஜாதகர்கள் பஞ்சமி திதியில் பாம்பு புற்று உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்குச் சென்று ஐந்து எண்ணெய் கலந்து அல்லது நல்லெண்னெயை சிகப்பு திரி போட்டு குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி நம் வேண்டுதல்களை மனத்திற்குள் நினைத்துக்கொண்டே வழிபட வேண்டும். நிவேதனமாகப் பூண்டு கலந்து தோல் நீக்காத உளுந்த வடை அல்லது நவதானிய வடை மிளகு சேர்த்த வடை, தயிர்ச்சாதம், மொச்சை, சுண்டல், பானகம் ஆகியவை நிவேதனமாகப் படைக்கலாம். மந்திரம்: ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ - என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபட எல்லாவித நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக ஏவல், பில்லி, சூனியம் போன்றவையால் பாதிப்புகள் ஏற்படாது. குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாகும். கடன் தொல்லை, வறுமை ஒழியும். வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி என இரண்டு முறை வரும் பஞ்சமி திதியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம் வளர்பிறை பஞ்சமி திதியில், வாராஹிதேவியை மனதார வணங்குங்கள். குடும்பமாக வீட்டில் அமர்ந்து தீபம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்யுங்கள். தீய சக்திகள் அனைத்தையும் விரட்டி, காத்தருள்வாள் வாராஹி தேவி! .

Tags

Next Story