இன்று வள்ளலார் தினம் : இறைச்சி கடைகள் மூடப்படும்

இன்று வள்ளலார் தினம் : இறைச்சி கடைகள் மூடப்படும்
பைல் படம்
வள்ளலார் தினத்தை முன்னிட்டு இன்று இறைச்சி கடைகள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் உத்தரவிட்டார்.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வள்ளலார் தினத்தையொட்டி இன்று (வியாழக்கிழமை) இறைச்சி கூடங்கள், இறைச்சி கடைகள் செயல்பட தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சி கூடங்கள், இறைச்சி கடைகளில் விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.

எனவே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை அடைத்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story