திருப்பூரில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரிப்பு!

திருப்பூரில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரிப்பு!

திருப்பூரில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து கிலோ ரூ.50 க்கு விற்பனையாகிறது.


திருப்பூரில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து கிலோ ரூ.50 க்கு விற்பனையாகிறது.

திருப்பூரில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரிப்பு. கிலோ ரூ. 50 க்கு விற்பனை! திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் டிற்கு தக்காளி வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.இதுகுறித்து வியாபாரி கூறியதாவது தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து தக்காளி வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது வரத்து குறைந்துள்ளது.வெளிமாவட்டங்களிலிருந்தும் வரத்து குறைந்தே காணப்படுகிறது.

கடந்த மாதங்களில் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 150 முதல் ரூ. 250 வரை இருந்த நிலையில் தற்போது ரூ. 450 வரை சென்றது. மேலும் வெளிமாவட்டங்களிலிருந்தும் வரும் 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ. 1000 வரை சென்றது. வரத்து குறைந்ததால் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் தக்காளியை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர். தற்போது தக்காளி சில்லறை விற்பனையாக ஒரு கிலோ ரூ. 50 வரை விற்பனையாகிறது. தக்காளி விலை அதிகரித்தும் விளைச்சல் இல்லாததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர் என தெரிவித்தார்...

Tags

Next Story