சேலம் உழவர் சந்தைகளில் தக்காளி விலை திடீர் உயர்வு

சேலம் உழவர் சந்தைகளில் தக்காளி விலை திடீர் உயர்வு

 மழை காரணமாக சேலம் உழவர் சந்தைகளில் தக்காளி விலை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  

மழை காரணமாக சேலம் உழவர் சந்தைகளில் தக்காளி விலை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் புறநகரில் ஆத்தூர், எடப்பாடி, மேட்டூர், வாழப்பாடி, ஆட்டையாம்பட்டி, மேச்சேரி, தம்மம்பட்டி, ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை ஆகிய 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு அந்தந்த பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மேச்சேரி, ஓமலூர், நங்கவள்ளி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் தக்காளிகள் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெங்களூரு பகுதிகளில் இருந்தும் உழவர் சந்தைகளுக்கு தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 முதல் ரூ.40 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தக்காளி வரத்து கடுமையாக குறைந்துவிட்டதால் ஒரு கிலோ ரூ.70 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி வாங்க வந்த பொதுமக்கள் விலையை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக உழவர் சந்தை விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story