வரத்து சரிவால் தக்காளி விலை உயர்வு

பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் தக்காளிகளின் வரத்து சரிவால் விலை உயர்ந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காரிமங்கலம் கம்பைநல்லூர் நல்லம்பள்ளி பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரம் மேக்கர்களுக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது தினசரி 300 டன்களுக்கு மேல் தக்காளி விளைவிக்கப்பட்டு உள்ளூர் தேவைக்கு போக மற்றவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் தொடர் மழை காரணமாக தக்காளி வரத்து சரிந்தது.

இன்று ஜூன் 13 காலை 6 மணி நிலவரப்படி 15 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி 970 ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது தக்கலை விலை உயர்வால் தக்காளி சாகுபடி செய்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story