விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையை கலெக்டர் அறிவித்துள்ளார்.  

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறையை கலெக்டர் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் 14.03.2024 அன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, 14.03.2024 அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

மேற்படி, தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். மேலும், மாணவ/மாணவியர்களுக்கு 14.03.2024 அன்று தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் , உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 14.03.2024-க்குப் பதிலாக வருகின்ற 23.03.2024 (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்

Tags

Next Story