புதன்சந்தை பகுதியில் நாளை மின் தடை!

புதன்சந்தை பகுதியில் நாளை மின் தடை!

பைல் படம்

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பகுதியில் நாளை மின் தடை என அறிவிப்பு.

புதன்சந்தை பகுதியில் நாளை மின் தடை! புதன்சந்தை பகுதியில் நாளை பிப்ரவரி 9ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுந்த முன் ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். இது குறித்து நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு மாதமுமம், துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை பிப்ரவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் புதன்சந்தை, செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாதிரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 9ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story