நாளை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு

நாளை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு

நாளை நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சேலம் மாவட்டத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 270 பேர், 184 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். 

நாளை நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், சேலம் மாவட்டத்தில் மொத்தம் 43 ஆயிரத்து 270 பேர், 184 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் நாளை (26-ந் தேதி) எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பயிலும் 22 ஆயிரத்து 89 மாணவர்கள், 21 ஆயிரத்து 181 மாணவிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 270 பேர் 184 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். பொதுத் தேர்வுப் பணியில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். மேலும் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story