நாளை திருவாழ்மார்பன் கோவிலில் சித்திரை தேரோட்டம்

நாளை திருவாழ்மார்பன் கோவிலில் சித்திரை தேரோட்டம்

நாளை திருவாழ்மார்பன் கோவில் சித்திரை தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் பத்து நாட்கள் சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜை, அபிஷேகம்,நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் திருவிழாவான நாளை 22ஆம் தேதி காலை 9:15 மணிக்கு மேல் 10 .15 மணிக்குள் திருத்தேர்வடம் பிடித்து தேரோட்டம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு கருடர் ரிஷப வாகனத்தில் வீதி உலா, சப்தவர்ணம், பள்ளி வேட்டை போன்றவை நடக்கிறது. பத்தாம் திருவிழாவான 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு சுவாமி கருட வாகனத்தில் வீதி உலா, 6 மணிக்கு ஆராட்டு, இரவு 8 மணிக்கு திருக்கொடி இறக்கம், பூஜை ஆகியவை நடக்கிறது.

Tags

Next Story