திருவேங்கடம் பகுதிகளில் சாரல் மழை

திருவேங்கடம்  பகுதிகளில்  சாரல் மழை
திருவேங்கடம்  பகுதிகளில்  சாரல் மழை
திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை.விவசாயிகள் பெறும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதல் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வரும் நிலையில் இதல் அதிகாலை முதல் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. திருவேங்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்லும் போது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். தொடர் சாரல் மழையால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பெறும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story