குவைத்தில் சித்திரவதை - ஆம்பூர் பெண்ணை மீட்ட காவல்துறை

குவைத்தில் சித்திரவதை -  ஆம்பூர் பெண்ணை மீட்ட காவல்துறை

ஹீனா பேகம் 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் நவாஸ் பாஷா(39) இவரது மனைவி ஹீனா பேகம்(31). இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக தனது தாய் வீடான திருப்பத்தூர் எஸ்.என.நகரில் வசித்து வந்துள்ளார். தனது சகோதரரான அய்யூபிடம் (40) தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து அக்டோபர் 27 ம் தேதி குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு பணிக்கு சென்ற பிறகு தன்னை சித்தரவதை செய்வதாகவும், தனக்கு இங்கு இருக்க பிடிக்கவில்லை. தான் சொந்த ஊருக்கு வந்து விடுவதாகவும் தனது கணவர் நவாஸ் பாஷாவிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நவாஸ் பாஷா மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் புகார் மனு அளித்தார். அதனை தொடர்ந்து அவரை சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தாயகம் திரும்பிய ஹீனா பேகம் காவல் நிலையத்திற்கு வந்து காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்து விட்டு தனது கணவருடன் சென்றார்.

Tags

Next Story