வேலூரில் சுற்றுலாவின் கவிழ்ந்து விபத்து!

வேலூரில் சுற்றுலாவின் கவிழ்ந்து விபத்து!

விபத்து

வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாவின் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

வேலூர் வள்ளலார் பகுதியில் 13 பேர் கொண்ட குழுவினர் சென்ற சுற்றுலா வேன் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு வேலூர் பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இங்கு காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலாவின் மீது பின்னால் வந்த லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story