மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதி 2 பேர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதி 2 பேர் உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்த அனீஸ்
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே முக்கடல் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகன் அனீஸ் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் சுபின் (21). இருவரும் கூலி தொழிலாளிகள். நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அனீஸ், சுபின் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனீஸ், சுபின் இருவரும் பரிதாபமாக இன்று இறந்தனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுற்றுலா வேன் டிரைவர் கோவில்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் (36) மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story