சுற்றுலா வேனில் தீ விபத்து

சுற்றுலா வேனில் தீ விபத்து

தீ விபத்து 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்த ஆந்திரா மாநில பக்தர்களின் சுற்றுலா வேனில் தீ விபத்து ஏற்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர், வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வேனில் இருந்து புகை வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பக்தர்கள் வேனில் இருந்து கீழே இறங்கினர். உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

Tags

Next Story