கன்னியாகுமரியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

கன்னியாகுமரியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 4 பேர் படுகாயம்

விபத்து

கன்னியாகுமரியில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரிக்கு இன்று காலை கர்நாடகா மாநிலத்திலிருந்து 20க்கு மேற்பட்டவர்கள் ஒரு வேனில் சுற்றுலா வந்தனர். இவர்கள் வந்த வேன் இன்று காலை கன்னியாகுமாரி நான்கு வழிச்சாலையில், ஜீரோ பாயிண்ட் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த பேரிகாடில் மோதி அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் வேனுக்குள் அலறி சத்தமிட்டனர். உடனடியாக அப்பகுதியினர் மீட்பு பண்ணியில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் குழந்தைகள் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏகப்பட்டது.

Tags

Next Story